30.5 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல்துறை உயர் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வு

கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் உயர்ந்த பதவி டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை பெறுகின்றனர். இந்நிலையில், கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளை, டிஜிபியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமரேஷ் பூரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் குற்றப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு தலைவராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, மத்திய அரசு பணியில் உள்ள ஏடிஜிபி கருணாசாரும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading