குடியரசுத்தலைவர் தேர்தலில், கொரோனா தொற்றுள்ளவர்கள் வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18 ஆம் தேதி காலை 10மணிகு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகின்றது. சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், சிறப்பு ஏற்பாடாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொரோனா தொற்றுள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘கஞ்சா போதையில் இளைஞரைக் கடத்திய இருவர் கைது’
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முதல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களும், தொற்று அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.