31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தலைவர் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளதையொட்டி சென்னை தலைமை செயலாக வளாகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது3. இதைதொடர்ந்து குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி குடியரசு தலைவர் வேட்பயாளராக திரௌபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் தேர்தலில் நிறுத்தியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாளை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம். எல்.ஏ.க்கு ‘பிங்க்’ நிற வாக்குச் சீட்டும் தரப்படும்.

தமிழகத்தில் நடக்கும் வாக்குப்பதிவுக்கான ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து ஏற்கனவே கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது சம்பந்தப்பட்ட, அதிகாரிகள் மற்றும் தேர்தல் முகவர்களின் முன்னி லையில் அது திறக்கப்பட்டு சோதனை செய்யப்படும். நாளை காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள குழு கூட்ட அறையில், மறைவு அமைக்கப் பட்டுள்ள மேஜை மீது ஓட்டுப் பெட்டிவைக்கப்பட்டு இருக்கும். அங்கு வாக்குச்சீட்டு தரப்படும். வாக்குப்பதிவுக்கு பிறகு அது சீலிடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் சென்னை  விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். வருகிற 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து வாக்களிக்கின்றனர். அவர்களின் வருகைக்காக தலைமைச் செயலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம்.பி. மற்றும் எல்.ஏ.க்கள், அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும்.

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாளை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்கலாம் என்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த புவனேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு ஆகியோர் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading