குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 18-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவராத்திரியானது மாதந்தோறும் வரும். ஆனால் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுகிறது. இந்த சிவராத்திரியானது மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், மதுரை வருகிறார்.
அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரினம் செய்கிறார். பின்னர் மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து கோவை செல்லும் அவர், ஈஷா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- பி. ஜேம்ஸ் லிசா