2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விளக்கியுள்ளார்.
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு முன்பு, இன்று திட்டங்களை விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக தேர்தல் வியூகம் எப்படி வகுப்பது, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற விரிவான சில திட்டங்களை அவர் எடுத்துரைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர், பிரசாந்த் கிஷோரின் திட்டங்கள் அனைத்தும், முழு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியிடம் தெரிவிக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு முடிவு என்ன என்பதனை தலைமை முடிவு செய்யும் எனவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 370 இடங்களை பிடிக்க கவனம் செலுத்த உள்ளதாக அவரின் திட்ட அறிக்கை சொல்வதாகவும், காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பும் அதிகபடியான இடங்களை பெற விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு முன்பும் பலமுறை பிரசாந்த் கிஷோர் உடன் கலந்து பேசியதாகவும், அவர் தேர்தல் வியூகம் வகுப்பாளராக மட்டும் அல்லாமல், கட்சியிலும் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, டெல்லி ஜன்பத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி திடீரென அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திக்விஜய் சிங், அஜய் மக்கான், அம்பிகா சோனி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.