பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியா கடற்கரை பகுதிகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஒன்று முதல் மூன்று மீட்டர் வரை சுனாமி அலைகளை உருவாக்கும் என்று அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.