மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் மற்றும் 6.4 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் மியான்மரின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்த நிலையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று காலை 2.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.95 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.