உலகம் முழுவதும் வசூல் சாதனையில் கலக்கும் பொன்னியின் செல்வன்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் பலர் முயற்சி செய்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. திரைப்படம் வெற்றி கரமமாக ஓடி கொண்டிருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. முந்தைய தமிழ் படங்களின் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. உலக அளவில் அதிக வசூல் குவித்த பெரிய வெற்றி படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.