தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில்
பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான தைத்திருநாளை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும்
சூழலில், அதிகாலையிலே எழுந்து புத்தாடை அணிந்து, புத்தரிசிட்டு, பொங்கலிட்டு
சூரியனுக்கு படைத்து உற்சாகமாக பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் உலகமெங்கும்
கொண்டாடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் வகையாக
லண்டன் நாட்டிலுள்ள பிரித்தானியா பகுதியில் வாழும் இலங்கைத் தமிழர்கள் ஒன்று
கூடி தமிழ் கலாச்சாரத்தை அன்னாட்டவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில்
அதிகாலையில் எழுந்து பொங்கலிட்டு சூரிய கடவுளுக்கு படையல் இட்டு உற்சாகமாக
பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
மேலும், தமிழர்களின் தொன்மை, வரலாறு, கலை, பண்பாடு உள்ளிட்டவர்களை லண்டனில்
பிறந்த குழந்தைகளும் அறியும் வகையில் இந்த பொங்கல் பண்டிகையானது
கொண்டாடப்பட்டதாக அங்குள்ள இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
பார் போற்றும் தமிழர்கள் என்பார்கள், அந்த வகையில் தமிழர்களின் நாகரிகம்
உலகமெங்கும் பரவி வரும் சூழலில், மென்மேலும் தமிழர்களின் நாகரிகத்தை
பறைசாற்றும் விதமாக லண்டன் மாநகரில் கொண்டாடிய இந்த தைப்பொங்கல் சமூக
வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.