முக்கியச் செய்திகள் இந்தியா

டிராக்டர் பேரணி; விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதுடன், தடியடியும் நடத்தினர்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட விவசாயிகள் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். மத்திய அரசின் சார்பில் ராஜபாதையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் முடிந்த உடன் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், டெல்லியில் குடியரசு தினவிழா முடிவடைவதற்கு முன்பு காலை 8 மணிக்கே விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் பெரும் திரளாக நுழைய முயன்றனர். இதனால் சிங்கு எல்லை வழியாக டில்லியில் நுழைய முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுக்க முயன்றனர். போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போதும் கலையாமல் தொடர்ந்து முன்னேறிவந்த விவசாயிகள் மீது குதிரைப்படை போலீஸார் தடியடி நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டசபையில் தீர்மானம்: கமல் கோரிக்கை

Gayathri Venkatesan

“என்னை கொல்ல முயன்றார்”; முன்னாள் ராணுவ தளபதி மீது இம்ரான்கான் பகிரங்க குற்றச்சாட்டு

G SaravanaKumar

‘மிஸ்டர் வாக்கு பெட்டி’; விமானத்தில் பறந்த வாக்குபெட்டிகள்

G SaravanaKumar

Leave a Reply