சென்னையில் 324 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறும் விதமாக, அமைக்கப்பட்ட phase-2 கோவிட் கேர் மையத்தை, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், சென்னையில் தற்போது வரை, 324 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை காவல்துறையினர் 17 ஆயிரம் பேருக்கு மேல், தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இந்த மையத்தில் காவலர்களுக்கு வல்லுநர்கள் மூலம் மூச்சுப் பயிற்சி அளிக்கவும், ஊட்டச்சத்து மிக்க, சுகாதாரமான உணவுகள் வழங்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.