நாட்டில் 6ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை 2030-ஆம் ஆண்டுக்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் 3ஜி மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் தற்போது இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் 4ஜி நெட்வொர்க் வரவுள்ளது. இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (TRAI) 25-ஆவது ஆண்டு விழா டில்லியில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
5ஜி நெட்வொர்க்கை கொண்டுவருவதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்துக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி முறையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும். அதாவது, வாழ்க்கை முறை மற்றும் தொழில் புரிவது எளிமையாகும்.
வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள் ஆகியவையும் வளர்ச்சி பெறும். 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி நெட்வொர்க்கை நாட்டில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சிறப்பு குழு தனது பணியைத் தொடங்கிவிட்டது.
கொள்கை முடக்கம் மற்றும் ஊழலின் சாட்சியாக 2ஜி அலைக்கற்றை காலம் திகழ்ந்தது. எனது தலைமையிலான அரசு 4ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி நெட்வொர்க்கில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்துள்ளது. கைப்பேசி உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் 2 இல் இருந்து 200 ஆக அதிகரித்துள்ளது. நமது நாடு தான் உலகின் மிகப் பெரிய கைப்பேசி உற்பத்தி மையமாகத் திகழ்கிறது.
தொலைத்தொடர்பில் ஆரோக்கியமான போட்டியை எனது தலைமையிலான அரசு ஊக்குவித்ததால் உலகிலேயே நமது தேசத்தில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா கிடைக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.