நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்
பிறப்பித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேசர்ந்தவர் சின்னதாய். கரிவலம் வந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 1988ல் நியமனம் ஆனார். தனது பணியை வரன்முறை செய்யக் கோரிய வழக்கு தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில், வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து
பணப்பலன்களையும் வழங்க வேண்டுமென கடந்த 2016 உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே சின்னதாய் உயிரிழந்தார். இதனால், அவரது மகன் பரமன் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது..
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், பள்ளி கல்வித்துறை
செயலர் காகர்லா உஷா IAS , பள்ளி கல்வித்துறை இயக்குநர் நந்தகுமார் IAS, நெல்லை
மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. IAS அதிகாரி காக்கர்லா உஷா
மற்றும் நந்தகுமார் IAS ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள்
ஆஜராவதற்கு விலக்க கேட்டு மனு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்தார் மேலும் இருவரையும் சென்னை போலீஸ் கமிஷனர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையே செப்டம்பர் 11 க்கு தள்ளி வைத்தார்.