June 7, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

பேடிஎம் UPI சேவை தொடரும்… வெளியான புதிய தகவல்…!

பேடிஎம் வங்கி சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகச் செயல்பட NPCI அனுமதி அளித்துள்ளது.

 

கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.   அதன்படி,  பயனர்களின் UPI சேவைகள் பேடிஎம் பேமெண்ட் வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தால் மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு அவை நிறுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டது.   இதையடுத்து பேடிஎம் வாடிக்கையாளர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  சில வங்கிகளின் உதவியுடன் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராக UPI சேவைகளை தொடர்ந்து வழங்க One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தேசிய கொடுப்பனவு ஆணையம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி, பயனர்கள் மற்றும் வணிகர்கள் UPI பரிவர்த்தனைகளை எந்த இடையூறும் இல்லாமல் செய்ய முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போதைய ஒப்புதலின்படி,  4 வங்கிகள் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ளன.  HDFC,  ஆக்சிஸ்,  யெஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகளும் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும்.  இதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading