பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை இல்லை – பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பீகாரில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் ஆகியோர்…

பீகாரில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது முக்கிய தீர்ப்பை வழங்கியது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்துமாறு சிலர் மேல்முறையீடு செய்தனர். ஆனால் நீதிமன்றம் இன்று மனுவை நிராகரித்து தீர்பு அளித்துள்ளது.

சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஐந்து வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை நீதிமன்றம் பல நாட்கள் விசாரித்து அதன் முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளது. முன்னதாக, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐந்து மனுக்களை ஒன்றாக விசாரித்து, விசாரணை முடிந்ததும் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​மனுதாரர்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேள்விகளை எழுப்பி, அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வாதிட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என மனுதாரர்கள் தெரிவித்தனர். பீகார் அரசு இதைச் செய்தால், அந்த நபரின் அந்தரங்க உரிமை மீறப்படும். இதுகுறித்து பீகார் அரசு தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.
கணக்கெடுப்பில் கேட்கப்பட்டுள்ள 17 கேள்விகள் யாருடைய தனியுரிமை உரிமையையும் மீறவில்லை என நீதிமன்றத்தில், பீகார் அரசு தனது நிலைப்பாட்டை வலுவாக முன்வைத்தது.
இதையடுத்து பீகாரில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.