வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானதாக இருக்கிறது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை வண்ணாரப்பேட்டையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ராபின்சன் பூங்கா அருகிலும் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானதாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடம் கிடைப்பதன் அடிப்படையில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.