31.9 C
Chennai
June 1, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஆடை முழுவதும் ஓவியம் : பள்ளி இறுதி நாளில் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர் 

தனது ஆடையில் ஓவியம் வரைய அனுமதி அளித்த ஆசிரியர் ஒருவர், அதை பள்ளியின் கடைசி நாளில் அணிந்து மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. 
பள்ளி மற்றும் கல்லூரியில்  கல்வி பயின்ற காலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நாம் என்னதான் நல்ல வேலை கிடைத்தோ அல்லது தொழிலதிபராக உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிறுவயதில் செய்த குறும்புகள் நம்மை அவ்வப்போது வந்து ஆனந்தப்படுத்தும். நாம் கண்டிப்பானவர் என நினைத்த  ஆசிரியர்  கூட பள்ளி  இறுதி நாட்களில்  அவர்கள் காட்டும் அன்பு  ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அப்படி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி  தந்துள்ளார். இன்ஸ்டாவில் ஸ்டான்பெரி என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்,  வகுப்பின் இறுதி நாள். கோட் அணிந்து உள்ளே நுழைகிறார் பெண் ஆசிரியை. திடீரென தனது கோட்டை கழட்டுகிறார். மாணவர்கள் அனைவரும் கூக்குரல் எழுப்புகின்றனர்.
ஓவியங்கள் வரைந்த ஆடையை அந்த ஆசிரியை அணிந்துள்ளார். ஏற்கனவே பள்ளி இறுதி நாளை முன்னிட்டு மாணவர்கள் தனது ஆடையில் ஓவியங்கள் வரையலாம் என ஆசிரியை அறிவித்திருந்தார். இதனையடுத்து மாணவர்கள் பல்வேறு ஓவியங்களை அந்த வெண்ணிற ஆடையில் வரைந்துள்ளனர். அந்த ஆடையை அணிந்தபடி வந்து தான் அந்த ஆசிரியை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading