‘ஆபரேஷன் அஜய்’ திட்டம்: இஸ்ரேலிலிருந்து 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தது; 143 பயணிகளுடன் 2 நேபாளிகள் அழைத்துவரப்பட்டனர்…

ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இரண்டு நேபாளிகள் உட்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அங்கு மனிதாபிமான பேரழிவு…

ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இரண்டு நேபாளிகள் உட்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அங்கு மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் படுகாயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில்,  ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இரண்டு நேபாளிகள் உட்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. இதனை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,241 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.