பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக தற்போது ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு, நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
அவர் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு தொடர்ந்து அந்த பொறுப்புகள் வழங்கப்படுமா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பதிலாக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சுவாமிநாதன் ஜானகிராமன்?
1) சுவாமிநாதன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வணிகவியல், கார்ப்பரேட் கணக்கியல் மற்றும் வங்கியியல் இளங்கலை – B.Com பட்டப்படிப்பை முடித்தார்.
2) பின்னர் அவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங், பேங்கிங் & எகனாமிக்ஸ் ஆகியவற்றில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் படிப்பில் சான்றிதழைப் பெற்றார்.
3) பின்னர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் இன்டர்நேஷனல் டிரேட் ஃபைனான்ஸில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ முடித்தார்.
4) சுவாமிநாதன் டிசம்பர் 1988 இல் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) மேலாளராகப் பணிபுரியத் தொடங்கினார்.
5) அதன்பிறகு, கிளை மேலாளர், தலைமை மேலாளர், AGM, VP & தலைமை வர்த்தக நிதி, துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்தார்.
6) நிதி நிறுவனங்கள் குழு, தலைமை பொது மேலாளர், துணை நிர்வாக இயக்குநர்-மூலோபாயம் மற்றும் தலைமை டிஜிட்டல் அதிகாரி, மற்றும் இறுதியாக SBI இன் நிர்வாக இயக்குநர் என பல உயர் பதவிகளில் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார்.
7) ஜியோ பேமெண்ட்ஸ் மற்றும் என்பிசிஐ மற்றும் பேங்க் ஆஃப் பூட்டான், எஸ்பிஐ ஜேவி ஆகியவற்றுடன் எஸ்பிஐயின் நியமன இயக்குநராகவும் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.







