முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மரத்தில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் உடல்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஊழியர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில், அய்யனார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆனந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று காலை ஆனந்தராஜ் பட்டாசு மருந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதால் ஆனந்தராஜ் உடல் சிதறிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். மரத்தில் தொங்கிய ஆனந்தராஜின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடிவிபத்து ஏற்பட்ட அறை முற்றிலுமாகத் தரைமட்டமானது.

இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

Web Editor

டி-20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா

Halley Karthik

தகராறில் ஈடுபட்ட 2 பேரை மரக்கன்றுகளை நடவைத்த போலீசார்

Gayathri Venkatesan