ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த கூடுதல் படுக்கை வசதிகள் குறைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து பன்னாட்டு விமானநிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து கர்நாடகா வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் கூடுதலாக 150 படுக்கைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.