திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 8ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திமுக தலைமை அலுலவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தொகுதி பங்கீடு விவகாரத்தில், திமுக பெரிய அண்ணன் போக்குடன் நடந்துகொள்ளவில்லை என தெரிவித்தனர். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பெரியண்ணன் மனோபாவத்தோடு எப்படி நடந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டணிக் கட்சிகள் புதிய சின்னத்தில் நிற்பதைவிட ஏற்கனவே மக்களிடம் அறிமுகமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது நல்லது என தெரிவித்த அவர்கள், அதே நேரம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு, எந்த ஒரு கூட்டணிக் கட்சியையும் திமுக வற்புறுத்தவில்லை, எனத் தெரிவித்தனர்.
மொத்தம் 7 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், வரும் 8ம் தேதிக்கு பின்னர் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும், என்றும் ஆர்.எஸ்.பாரதியும், கே.என்.நேருவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். திமுக கூட்டணி கட்சிகளிடையே மனக் கசப்பு எதுவும் இல்லை என்றும் கூறினர்.