ஒடிசா ரயில் விபத்து : நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக காட்சிகள்..!!

ஒடிசா ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான பிரத்யேக காட்சிகள் நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்துள்ளன. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு…

ஒடிசா ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான பிரத்யேக காட்சிகள் நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்துள்ளன.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம்  பஹனகா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது  சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன.

தடம்புரண்ட ரயிலின் பெட்டிகள் அருகில் உள்ள தண்டாவாளத்தில் விழுந்த கிடந்ததில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்தபூர் – ஹவுரா விரைவு ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதனால் யஷ்வந்த்பூர் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் விபத்து குறித்த பிரத்யேக ட்ரோன் காட்சிகள் நியூஸ் 7 தமிழுக்கு கிடத்துள்ளன. அவற்றை கீழே உள்ள வீடியோவில் காணலாம்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.