ஒடிசா ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான பிரத்யேக காட்சிகள் நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்துள்ளன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பஹனகா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தடம்புரண்ட ரயிலின் பெட்டிகள் அருகில் உள்ள தண்டாவாளத்தில் விழுந்த கிடந்ததில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்தபூர் – ஹவுரா விரைவு ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதனால் யஷ்வந்த்பூர் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரயில் விபத்து குறித்த பிரத்யேக ட்ரோன் காட்சிகள் நியூஸ் 7 தமிழுக்கு கிடத்துள்ளன. அவற்றை கீழே உள்ள வீடியோவில் காணலாம்..