சென்னை காசிமேடு பழைய மீன்பிடி துறைமுகத்தில் சிறிய வகை மீன்களை வாங்க, மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
கடந்த மாதம் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் துவங்கிய நிலையில், மீன்பிடி துறைமுகத்தில் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிறிய வகை படகுகளான பைபர் படகுகள் மற்றும் கட்டுமரம் மூலம் குறைந்த தூரம் சென்று மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான ஃபைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்களை பிடித்து வந்த நிலையில், சிறிய வகை மீன்களான சங்கரா, மத்தி, கவலை, கானாங்கத்தை, நவரை போன்ற மீன்கள் அதிக அளவில் விற்பனையாகின. பெரிய வகை மீன்களான வஞ்சிரம் மீன் கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கும் – பாறை உள்ளிட்ட மற்ற மீன்கள் அறநூறு ரூபாய்க்கும் விற்பனையாகின.
இதேபோன்று திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கட்லா, கெண்டை, ஜிலேபி போன்ற வளர்ப்பு மீன்களையும் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா