தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 2019-20-ஆம் ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்ததாகவும், மாணவர்களின் வருகைப்பதிவு உயர்ந்ததாகவும், அப்போது, தேர்வு முடிவை SMS மூலம் அறிவிக்கும் திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இந்தியாவுக்கே முன்மாதிரியாக கல்வித் தொலைக்காட்சியை கொண்டு வந்த பெருமை அதிமுக அரசையே சாரும் என்று பேசிய அவர், ஹைடெக் லேப் – மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளதாகவும், மத்திய அரசே இந்த திட்டங்களை பாராட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்வு தேதிகளை பொறுத்தவரை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அதிமுக அரசு அறிவித்ததாக சுட்டிக்காட்டினார். அப்போது, மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடாக இருந்தாலும், இந்தியாவிலேயே அதிமுக ஆட்சி காலத்தில் தான் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் சூழல் அதனால், உருவானதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது, தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்றும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.