இனி ரகசியம் இல்லை… சொத்து விவரங்களை வெளியிடும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – காரணம் என்ன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் தங்கள் முழு சொத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர ஒப்புக் கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களின் மதிப்பை வெளியிடுவது அவர்களின் சுய முடிவாக இருக்கும் என்றும், வெளியிடப்பட்ட அனைத்து தரவுகளும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமிருந்து ஏன் இந்த திடீர் வெளிப்பாடுகள்?.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் அவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையை நீதிபதிகள் உறுதி செய்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.