விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு , ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நிறைவடைந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். அப்போது பேசிய அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ,ரெப்போ ரேட் விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
இதனால் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி உயராது. இதனால் பொதுமக்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள , கடன்களுக்கான வட்டி அதிகரிக்காது. மேலும் வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டியும் உயர வாய்ப்பில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத் தவிர வங்கிகளிடமிருந்து, ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 % ஆக மாற்றமின்றி தொடர்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி, சர்வதேச பொருளாதார காரணிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சவாலாகவே உள்ளது. அதே நேரத்தில் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. உள்நாட்டு பொருளாதாரத்தில் நம்பிக்கையான அம்சங்கள் தென்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக முக்கிய உணவுப்பொருட்கள் , காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. விலைவாசியை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருவதாகவும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில் 2023-24 உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 6.5 % ஆக இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.