நீடா அம்பானியின் ரூ.2 லட்சம் மதிப்பிலான அணிகலன்! இணையத்தில் வைரல்!

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்செண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய வைபவத்தில் நீடா அம்பானி ரூ.2 லட்சம் மதிப்பிலான அணிகலனையும், ரூ.6 லட்சம் மதிப்பிலான நெக்லஸையும்  அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்செண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய வைபவத்தில் நீடா அம்பானி ரூ.2 லட்சம் மதிப்பிலான அணிகலனையும், ரூ.6 லட்சம் மதிப்பிலான நெக்லஸையும்  அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானிக்கும்,  ராதிகா மெர்செண்டுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி,  தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.

இதனையொட்டி திருமண முன் வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்,  மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்த முன் திருமண வைபவத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன்,  ஷாருக்கான்,  சல்மான் கான்,  அமீர் கான்,  ரஜினி காந்த், சஞ்சய் தத்,  அபிஷேக் பச்சன்,  ராம் சரண்,  சயீப் அலிகான்,  ரன்பீர் சிங்,  ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய்,  கரீனா கபூர்,  தீபிகா படுகோன்,  சாரா அலிகான்,  ஆலியா பட், ஜான்வி கபூர்,  கேத்ரினா கைஃப்,  இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின்,  தோனி,  ரோகித் சர்மா,  ஹர்திக் பாண்டியா,  பிராவோ,  ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்தும் 1,000 – த்திற்கும் மேற்பட்ட சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அம்பானி குடும்ப திருமண முன்வைபவம்: 3 நாட்கள் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? - News7 Tamil

இதனையடுத்து,  மே 29 முதல் தெற்கு பிரான்ஸ்  கடற்கரையோரத்தில் சொகுசு கப்பலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் 2-வது முன் திருமண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இவ்விழாவில் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்செண்ட் 2-வது முன் திருமண வைபவ நிகழ்ச்சியில் நீடா அம்பானி அணிந்திருந்த நெக்லஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நீடா அம்பனி இந்த நிகழ்ச்சிக்கு ரெடி ஆகும் வீடியோவை சிகையலங்கார நிபுணர் அமித் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நீடா அம்பானி ஒரு வெள்ளை நிற உடையை அணிந்திருப்பதைக் காணலாம்.  இது பண்டைய ரோமானியர்கள் அணிந்திருந்த பிரபலமாக உடை என்று கூறப்படுகிறது.  அவர் ஷியாபரெல்லி ப்ரூச் என்கிற அணிகலனை அணிந்திருந்தார்.  அதில் ஒரு பக்கம்  வாய் மற்றும் மறுபுறம் கண் உள்ளது.  இதன் விலை ரூ.2 லட்சத்திற்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.  அவர் அதே பிராண்டில் இருந்து Collier Ruban Spirale என்ற நெக்லஸை அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.6 லட்சத்திற்கும் அதிகமாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.