பாய்ச்சலுக்கான 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.
நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.
நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான்ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு, விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும்தான்.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்தாவது ஆண்டியில் நுழையும் நியூஸ் 7 தமிழுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் :
”தமிழ் ஊடக் துறையில் முன்னணி ஊடகமாக விளங்கும் நியூஸ் 7 தமிழ் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு நடப்பை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதில் நியூஸ் 7 தமிழ் முன்னணியில் உள்ளது மட்டற்ற மகிழ்ச்சி” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயக் குமார் :
” உலகெங்கும் நடுநிலையோடு உண்மைச் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய இடம் பிடித்திருக்கிற நியூஸ் 7 தமிழ் , நல்ல செய்திகளை நடுநிலையோடு முதன்மையான செய்திகளை முதன்முதலாக கொடுக்கூடிய செய்தி சேனலாக தொடர்ந்து சாதனைபடைத்து வருகிறது. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் :
நியூஸ் 7 தமிழ் 9ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமூகத்திற்கு பயன் அளிக்கும் பல நல்ல நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் நடத்தி வருகிறது. காரும் சோறும் போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. மக்கள் அபிமானத்தை பெற்று மென்மேலும் வளர நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச் சந்திரன் :
”உண்மைகளை உடனுக்குடன் வழங்குவதிலும், அரசின் திட்டங்களை மக்களிடம் அறிமுகம் செய்து நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் சிறப்பாக செயலாற்றும் நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு தொலைக்காட்சிகளிலேயே நேர்மையோடும், நடிநிலையோடும் செயல்படும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு என்னுடைய வாழ்த்துகள். நியூஸ் 7 தமிழுக்கு 10வது ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் :
“நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஒன்பது ஆண்டு பயணத்தை நிறைவு செய்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நல்ல நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் கல்விக்கான மற்றும் கல்வி கடனுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது நியூஸ் 7 தமிழின் தனித்துவமான முயற்சி. இது தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறையோடு ஊடகம் செயல்பட வேண்டும் என்பதற்கான சிறந்த முன்னுதாரணம்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் :
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 9ஆண்டுகளை நிறைவு செய்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களின் குரலாக நியூஸ் 7 தமிழ் விளங்கியது. மக்களுக்கு தரமான செய்திகளை வழங்கும் நியூஸ்7 தமிழின் பணிகள் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி :
களத்தில் இருக்கும் உண்மைச் செய்திகளை அவசரகதியில் , பரபரப்பு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் வழங்காமல் உண்மைகளை மட்டும் வழங்கும் நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் :
ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊடகத் துறையில் மென்மேலும் உயர்ந்து பல்வேறு சாதனைகளை புரிய என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விசிக தலைவர் திருமாவளவன் எம்பி :
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் நன்மதிப்பை பெற்று சிறந்து விளங்கி வருகிறது நியூஸ் 7 தமிழ். விசிக போன்ற விளிம்பு நிலை அமைப்புகளை அங்கீகரித்ததிலும், ஊக்கப்படுத்தியதிலும் நியூஸ் 7 தமிழுக்கு பெரும் பங்கு உண்டு. நன்றி உணர்வோடு நியூஸ் 7 தமிழை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்ததாவது :
கடந்த ஒன்பது ஆண்டுகாலம் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :
நியூஸ் 7 தமிழ் செய்தித் தொலைகாட்சி பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மதவெறி அரசியலை எதிர்த்தும், சாதிய கண்ணோட்டத்திற்கு எதிராகவும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.