நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | நிவாரண பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் வருகை!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக கூடுதல் ஹெலிகாப்டர்கள் நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.…

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக கூடுதல் ஹெலிகாப்டர்கள் நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன.  குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமலும்,  உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு கிராமங்கள் மழை நீரில் சூழ்ந்து இருப்பதால் ஹெலிகாப்டரில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதே தீர்வாகும் என நியூஸ் 7 தமிழ் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தது.  அதன் எதிரொலியாக கூடுதலாக இரண்டு ஹெலிகாப்டர் என மொத்தம் ஏழு ஹெலிகாப்டர் நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.