நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித்குமார் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 35.
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் மானாமதுரை செய்தியாளராக பணியாற்றியவர் ரஞ்சித்குமார். அவருக்கு யுவஸ்ரீ என்ற மனைவியும் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் 2 வயதில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர்.
செய்தி சேகரிப்பதில் துடிப்போடும் ஈடுபாடோடும் பணியாற்றிய ரஞ்சித்குமார், இன்று காலை 8.15 மணியளவில் வழக்கம் போல பணிக்கு புறப்பட்டபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரஞ்சித்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொழில்திறன் மிகுந்த ரஞ்சித்குமாரின் அகால மரணம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணத்திற்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.