32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய காவல் துறை ஆணையரகங்கள்: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாம்பரம் மற்றும் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் துறை ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மானிய கோரிக்கை அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய காவல் ஆணையரகம் அமைக்கப்படும் அறிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

தாம்பரம் மற்றும் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் துறை ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தாம்பரம் மாநகராட்சியின் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading