மதுரையில் புதிய பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…..!

மதுரையில் தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை சூட்டுவதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்

நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது திராவிடமாடல் ஆட்சியில் அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”.

தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.