முக்கியச் செய்திகள் தமிழகம்

இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது: கே.எஸ்.அழகிரி

திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ்- திமுக இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. அதில், முடிவு எட்டப்படாத நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறினார். தொகுதி பங்கீடு குறித்து தாங்களே முடிவெடுப்போம் என்றும் மேலிட பொறுப்பாளர்கள் வரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக, மதிமுக தலைமை அலுலவகத்துக்குச் சென்ற திமுக நிர்வாகிகள், அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காணாமல் போன ராணுவ போர் விமானத்தின் டயர் மீட்பு

Halley Karthik

தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு: பள்ளி கல்வித் துறை உத்தரவு

Web Editor

அதிமுக தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு?

G SaravanaKumar