மறைமலை அடிகளார் உட்பட 500க்கும் மேற்பட்ட தமிழர் அறிஞர்கள் ஒன்று கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கலைஞர் கணினி கல்வியகத்தில் பயிலக்கூடிய மாணவர்களோடு இணைந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமத்துவபொங்கல் திருநாளை கொண்டாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சைதாப்பேட்டையில் வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து பொங்கல் வைத்து அமைச்சருடன் தைத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என கருணாநிதி தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல எனவும் மறைமலை அடிகளார் உட்பட 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி நிறைவேற்றிய தீர்மானம் என தெரிவித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக பொங்கலை பிடிக்காமல் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றியதாகவும் அமைச்சர் கூறினார்.
விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் ஆளுநரை அநாகரிகமாக பேசியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற பேச்சுக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்றைக்கும் அனுமதிக்க மாட்டார் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்பது தமிழக மக்கள் மாணவர்களுடைய விருப்பம் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை என்றால் தமிழக மக்களுக்கு நேர் எதிராக அவர் செயல்படுகிறார் என அர்த்தம் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். அதிமுக ஆட்சியில் போதை பொருட்கள் கட்டுப்படுத்தாத காரணத்தினால்தான் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்ததாகவும்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருள்கள் ஊடுருவதை தவிர்ப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.