நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல், தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து பேசினார். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, சில காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது அரசியலமைப்பு சட்டத்தின்படி சரியானது அல்ல என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீட் விலக்கு மசோதா மீதான ஆளுநரின் கருத்து தவறானது என்றும், ஏ.கே.ராஜன் குழுவை அது அவமானப்படுத்துவதாக உள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார். அரசியலமைப்பின்படி, எந்த சட்டத்தையும் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு எனக்கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில அரசின் உரிமையை தடுப்பது, அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக தெரிவித்தார். மாநிலம் இயற்றும் சட்டம் மட்டுமே அம்மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு சமத்துவத்தை கொண்டு வரும் என நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது உரையை நிறைவு செய்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.