உக்ரைன் நாட்டிற்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உறுதி கூறினார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 46-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் நடைபெற்று வரும் சண்டையில் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா, மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்கள் அளித்தும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். உக்ரைனுக்கு ஆதரவாக 120 கவச வாகனங்கள் மற்றும் ஏவுகணைகள் வழங்கிய ராணுவ உதவிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். உக்ரைனுக்கு தேவையான நிதி மற்றும் ராணுவ உதவிகளை கூடுதலாக வழங்கப்படும் எனவும் போரிஸ்ஜான்சன் உறுதிகூறினார். இதனையடுத்து இருவரும், கீவ் நகர வீதிகளை பார்வையிட்டனர்.