நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி எம்.ஏ.எம் இன்ஜினியரிங் கல்லூரி போட்டியில் பங்கேற்காததால் ஜேஜே இன்ஜினியரிங் காலேஜ் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில் திருச்சி மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்றது.
இன்று மதியம் எம்.ஏ.எம் காலேஜ் இன்ஜினியரிங் திருச்சி மற்றும் ஜேஜே இன்ஜினியரிங் காலேஜ் திருச்சி ஆகிய இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த மதிய போட்டி ஸ்க்ராட்ச் செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
எம்.ஏ.எம் காலேஜ் இன்ஜினியரிங் திருச்சி போட்டியில் பங்கேற்காததால் ஜேஜே இன்ஜினியரிங் காலேஜ் திருச்சி அணிக்கு இரண்டு புள்ளிகள் நடுவர்களால் தரப்பட்டது.