நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மதுரை மன்னர் கல்லூரியை சௌராஷ்ட்ரா கல்லூரி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில் மதுரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் சௌராஷ்ட்ர கல்லூரி மற்றும் மதுரை மன்னர் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்ட்ரா கல்லூரி அணி வென்று களம் இறங்கியது. 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 148 ரன் எடுத்தது . எதிரணிக்கு 149 ரன் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. மேலும் முதல் பேட்ஸ்மேனாக களம் இறங்கியது முதல் கடைசி வரை சந்தோஷ் என்ற வீரர் 64 பந்துக்கு 73 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் மன்னர் கல்லூரி வீரர் சூர்யா 24 பந்துக்கு 19 ரன் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
149 ரன் இலக்குடன் களம் இறங்கிய மதுரை மன்னர் கல்லூரி முதல் பேட்ஸ்மேனாக கோபிநாத் – ஆதித்யா களம் இறங்கினர். 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன் எடுத்து போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் சௌராஷ்டிர கல்லூரி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சௌராஷ்டிர கல்லூரி வீரர் சந்தோஷ் 64 பந்துக்கு 73 ரன் எடுத்துடன் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். அவர் வீசிய பந்து வீச்சில் 21 பந்திற்கு 21 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் சந்தோஷ் மூன்றாவதாக தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.