என்.சி.எல் 2023 கிரிக்கெட் தொடரில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் பிரான்சிஸ் சேவியர் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.
செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 (NEWS 7 TAMIL CRICKET LEAGUE 2023) T20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம் 32 அணிகள் இந்த டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள் : NCL 2023 : பி.டி.எம் கல்லூரியை வீழ்த்தி கே.எல்.என் பொறியியல் கல்லூரி வெற்றி
அந்த வகையில், திருநெல்வேலி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி 12.5 ஓவரில் 69 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் பிரான்சிஸ் சேவியர் கல்லூரி அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில், 21 பந்துகளில் 27 ரன்கள் மற்றும் 1 விக்கெட்டை வீழ்த்திய பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவர் ஜெபின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.







