‘மகாராஜா’ திரைப்பட இயக்குநருடன் இணையும் நயன்தாரா?

மகாராஜா படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம்…

மகாராஜா படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் உருவாகியுள்ளது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது.   இதனைத் தொடர்ந்து, இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக யாரை வைத்து படம் உருவாக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாத தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு மகாராணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.