28.9 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி: முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெறும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில், யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் என்பது குறித்த தகவலை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் “எனது வாக்கு எனது எதிர்காலம் – ஒரு வாக்கின் வலிமை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் இணையதளம் மூலமாக, குறும்படம் உருவாக்கம் (Video Making Contest), பாட்டுப்போட்டி (Song Cantest), சுவரொட்டி உருவாக்கம் (Poster Design Contest), சுனோகன் உருவாக்கம் (Slogan Contest), வினாடி வினா (Quiz Contest)ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தலைப்புகளில் நடைபெறும் போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வாக்காளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறும்படம் உருவாக்கம், பாட்டுப்போட்டி மற்றும் சுலோகன் உருவாக்கம் ஆகிய போட்டிகளில் மட்டும், ஆர்வலர்கள், தொழில்முறை கலைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மூன்று பிரிவுகளில் நடத்தப்பட இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்ள https://voterawarenesscontestin என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் எனவும், 15.03.2022 தேதி பதிவு செய்ய கடைசி நாள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், குறும்படம் உருவாக்கத்திற்கு முதல் பரிசாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் எனவும், தொழில்முறை கலைஞர்களுக்கு முதல் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் ஆர்வலர்களுக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, வினாடி வினாப் போட்டியில் மூன்றாவது கட்டம் முதல் பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. குறும்படம் உருவாக்கம், பாட்டுப்போட்டி மற்றும் சுலோகன் உருவாக்கம் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது படைப்புகளை ஆங்கிலம் உட்பட இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளில் விருப்பத்திற்கேற்ப படைக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்படுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading