தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய அளவிலான கடல் கயாக் சாகச போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 16 மாநிலங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியன் கயாக் மற்றும் கனோயிங் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு அசோசியேசன் ஆப் கயாக் அண்ட்கனோயிங் சார்பில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி, முத்து நகர் கடற்கரை பகுதியில் கடல் கயாக் சாகச போட்டி தொடங்கியது.
இந்த போட்டி துவக்க விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில்
எம்.பி கனிமொழி,அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். ஸ்டாண்ட் அப் பெடலிங், ஒற்றையர், இரட்டையர் படகு போட்டி உள்ளிட்ட கடல் சாகச போட்டிகள் 10ஆம் தேதி வரை முத்து நகர் கடற்கரையில் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளிட்ட இந்தியாவில்
உள்ள ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த சுமார்
150 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்.
போட்டிகள், கடலில் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை நடத்தப்படுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் முறையாக சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசாக ரூபாய் 20,000 வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆசிய அளவிலான போட்டி மற்றும் சர்வதேச அளவிலான கையாக் போட்டிக்கு தகுதி பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.
ம. ஸ்ரீ மரகதம்