நடிகர் தனுஷின் 51- வது படத்தில் நாகர்ஜூனா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி வருகிறார். இதில் துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர். தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தின ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமா படக்குழு அறிவித்திருந்தது.
மேலும், நாகர்ஜூனா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நாகர்ஜூனா நடிப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது.







