33.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேள்வி கேட்டவருக்கு 40,000 பக்கங்களில் பதில் – அதிர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு அம்மாநில சுகாதாரத்துறை 40 ஆயிரம் பக்கங்களில் பதில் அளித்து  அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இந்தூரை சேர்ந்தவர் தர்மேந்திர சுக்லா. இவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தலைமை சுகாதார அதிகாரியிடம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஓரு மாதமாகியும் பதில் அளிக்காததால் மேல்முறையீடு செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட மேல்முறையீட்டு அதிகாரி கேட்ட விவரங்களை கட்டணம் ஏதும் இன்றி அளிக்க உத்தரவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து விவரங்களை பெற்றுக்கொள்ளுமாறு தர்மேந்திர சுக்லாவிற்கு தகவல் வந்தது. தனது காரில் அலுவலகம் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் கேட்டிருந்த பதில்களை சுமார் நாற்பதாயிரம் பக்கங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்து சற்று மிரண்ட அவர், பதில் ஆவணங்களை தனது காரில் (ஓட்டுநர் இருக்கையை தவிர)அடுக்கி வீட்டுக்கு கொண்டு சென்றார்..

ஆர்டிஐ மூலம் ஒருவர் கேட்ட விவரங்கள் அடங்கிய பதிலுக்கு கட்டணமாக, பக்கம் ஒன்றுக்கு ரூ.2 வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் கேட்ட விவரங்கள் ஒரு மாதத்திற்குள் அளிக்காவிட்டால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. தர்மேந்திர சுக்லா கேட்ட விவரங்கள் ஒரு மாதம் கழித்து தரப்பட்டதால் அவர் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading