விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு, அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டவர் பூலித்தேவன் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட பூலித்தேவனின் 307 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் பூலித்தேவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/narendramodi/status/1565176163177476096?t=UXbUhw6q5POj3Wqt0b-fig&s=09
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என்று பதிவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா







