காணாமல் போன நடிகர் மரப்பெட்டிக்குள் சடலமாக மீட்பு; தொடர் மர்மங்களுக்கு விடை தெரியாமல் தவிக்கும் காவல்துறை!…

கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி காணாமல் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த நடிகர் ஒருவர் மரப்பெட்டிக்குள் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெஃப் என்று அழைக்கப்படுபவர் ஜெபர்சன் மச்சாடோ. இவர்…

கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி காணாமல் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த நடிகர் ஒருவர் மரப்பெட்டிக்குள் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெஃப் என்று அழைக்கப்படுபவர் ஜெபர்சன் மச்சாடோ. இவர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி காணாமல் போனார். இந்நிலையில், இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மரப்பெட்டியில் புதைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தடயவியல் பரிசோதனையில் இறந்துபோனது நடிகர் ஜெபர்சன் என்பது உறுதியானது.

அவரது கழுத்தில் இரும்பு கம்பி சுற்றப்பட்டிருந்தது கைகளும் கட்டப்பட்டிருந்தன. அவரது உடலில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ரசாயன திரவம் ஊற்றப்பட்டிருந்தது. என தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் உடல் கண்டெடுக்கப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்த பொலிஸார் என்பவரைக் கைது செய்து தற்போது விசாரித்து வருகின்றனர். இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த வீட்டிற்கு வந்துள்ளார் என்பதும் இறந்துபோன ஜெஃப்-க்கு நன்கு அறிமுகமானவர் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.