34.5 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள்

வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை குறித்த வைகோவின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில்!

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை குறித்து ம.தி.மு.க. தலைவர்
வைகோவின் கேள்விகளுக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார்.

மதிமுக தலைவர் வைகோவின் கேள்விகள்: அ) நகர்ப்புறங்களில் உள்ள வேலை இல்லாதவர்களுக்காக ராஜஸ்தானில் தொடங்கப்பட்ட இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் பற்றி அரசாங்கம் அறிந்திருக்கிறதா?. ஆ) அப்படியானால், அத்தகைய 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் பரிசீலிக்கிறதா?. இ) நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட நாட்கள் எவ்வளவு?. உ) அப்படியானால், அதன் விவரங்கள் தேவை. ஈ) நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான ஏழை வேலையில்லாத மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டுள்ள மாற்று வழி, அதன் விவரங்கள் என்ன? என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த கேள்விகளுக்கு, ஜூலை 18ஆம் தேதி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பதில்,  (அ): இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்குவதற்காக ராஜஸ்தான் மாநில அரசு 2022-23 பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. (ஆ) & (இ): நகர்ப்புறங்களில் திட்டம் இல்லை. (ஈ): கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதன் மூலம் நகர்ப்புறத்தில் வறுமை அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அரசு, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY NULM), நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வறுமை மற்றும் பாதிப்பைக் குறைக்க, அவர்கள் ஆதாயமான சுயவேலைவாய்ப்பு மற்றும் திறமையான கூலி வேலை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை நிலையான அடிப்படையில் மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படுகிறது.

கொரோனா காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட தங்கள் வணிகத்தை மீண்டும் தொடங்கும் வகையில், தெருவோர வியாபாரிகளுக்கு, நகர்ப்புறங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறு கடன்களை எளிதாக்குவதற்காக, பிரதமர் தெரு வியாபாரிகளின் அத்மா நிர்பர் நிதி (PM SVANidhi) திட்டத்தை ஜூன் 01, 2020 முதல் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தெரு வியாபாரிகள் ரூ. 10,000 வரை மூலதனக் கடனைப் பெறலாம். முந்தைய தவணையைத் திருப்பிச் செலுத்தியவர்கள் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ. 20,000 மற்றும் ரூ. 50,000 கடன்களைப் பெறலாம்.

மேலும், நகர்ப்புற மக்களின் பொருளாதார பற்றாக்குறையைப் போக்க, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – திட்டம் (PMAY-U) செயல்படுத்தப்படுகிறது; புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) திட்டம் மூலம் அடிப்படை சேவைகளை வழங்குவதற்கும் நகரங்களில் வசதிகளை உருவாக்குவதற்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ஸ்வச் பாரத் மிஷன் – குப்பை இல்லாத சுற்றுப்புறங்களுக்கான (SBM-U); தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் மூலம் (NUHM) நகர்ப்புற மக்களுக்கு சமமான மற்றும் தரமான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக குடிசைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது;

வணிகம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் திறன் பயிற்சி அளிப்பதற்காக ஸ்கில் இந்தியா மிஷன், சமக்ரா சிக்ஷா அபியான் (SSA) ஆகியவற்றின் மூலம் சமமான தரமான கல்வி ஆகியவற்றை உறுதி செய்கிறது என்று பதில் அளித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading