சட்டப்பூர்வ அடிப்படையில் ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டத்தை தொடங்கும் உரிமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ரூ.4,600 கோடி மதிப்பில் செயல்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என கூறிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,காவிரி-ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கூறுவது எந்தவித மனிதாபிமானம் என தெரியவில்லை என அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மற்றும் தமிழ்நாட்டின் நீர்வள கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குதான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அமைச்சர் துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால், சட்டபூர்வ அடிப்படையில் ஒகேனக்கல் 2-வது குடிநீர் திட்டத்தை தொடங்கும் உரிமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.