ஏற்காடு மலைக் கிராமத்தில் அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக
அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வருகை தந்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்குள்பட்ட புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அடிப்படை வசதிகள் இன்றி பழுதடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், தொடர்ந்து வகுப்பறை வாரியாகச் சென்று ஆய்வு செய்தார். பள்ளி வளாகம் சிதிலமடைந்து கிடப்பதைப் பார்வையிட்ட அவர், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கலந்துரையாடினார். பள்ளியை விரைந்து சீரமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் சித்ராவை தொடர்பு கொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை உடனே செய்யுமாறும், துறை ரீதியான உதவிகள் செய்வதற்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்தார்.
-ம.பவித்ரா